செய்திகள்

பரங்கிமலை அருகே ரெயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல்

Published On 2016-11-04 15:05 IST   |   Update On 2016-11-04 15:05:00 IST
பரங்கிமலை அருகே ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக தாம்பரம்-கடற்கரை சேவையில் தாமதமானது.
ஆலந்தூர்:

தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 மணிக்கு ஒரு மின்சார ரெயில் பீச் ஸ்டேசன் நோக்கி சென்று கொண்டு இருந்தது. பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே சென்ற போது தண்டவாளத்தில் இருந்து அதிகமான சத்தம் கேட்டது.

இதுகுறித்து ரெயில் டிரைவர் பரங்கிமலை ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்தார். உடனே ரெயில்வே ஊழியர்கள் அங்கு சென்று தண்டவாளத்தை சோதனை செய்தனர். அப்போது பரங்கிமலை நிதி மேல்நிலை பள்ளி அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து 2 மணி நேரம் போராடி ஊழியர்கள் அதை சரி செய்தனர். இந்த திடீர் விரிசல் தாம்பரம்- கடற்கரை ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் தாமதமாக ரெயில்கள் சென்றன. ரெயில் பயணிகள், மாணவ- மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

Similar News