செய்திகள்
ஆதம்பாக்கத்தில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
ஆதம்பாக்கத்தில் பணத்தகராறில் தந்தையை மகன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் இ.பி. காலனி ராமகிருஷ்ண நகரை சேர்ந்தவர் மனோகரன் (65) வியாபாரி. இவரது மகன் கணேசன் (38) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கணேசன் தந்தை மனோகரனுடன் வசித்து வந்தார்.
கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனோகரனை தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனோகரனுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கணேசன் மது குடிக்கவும், தனது மனைவி நகையை அடகு மீட்கவும் மனோகரனிடம் ரூ.2 லட்சம் கேட்டார்.
ஆனால் மனோகரன் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் மனோகரனை கையால் பலமாக தாக்கினார். இதனால் மனோகரன் மயங்கி கீழே விழுந்தார்.
தகவல்அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் வரைந்து சென்று மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.
ஆதம்பாக்கம் இ.பி. காலனி ராமகிருஷ்ண நகரை சேர்ந்தவர் மனோகரன் (65) வியாபாரி. இவரது மகன் கணேசன் (38) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி விட்டது.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் கணேசன் தந்தை மனோகரனுடன் வசித்து வந்தார்.
கணேசனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அதனால் அடிக்கடி மது குடிக்க பணம் கேட்டு மனோகரனை தொந்தரவு செய்து வந்தார். இதனால் மனோகரனுக்கும், கணேசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு கணேசன் மது குடிக்கவும், தனது மனைவி நகையை அடகு மீட்கவும் மனோகரனிடம் ரூ.2 லட்சம் கேட்டார்.
ஆனால் மனோகரன் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கணேசன் மனோகரனை கையால் பலமாக தாக்கினார். இதனால் மனோகரன் மயங்கி கீழே விழுந்தார்.
தகவல்அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் வரைந்து சென்று மனோகரனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மனோகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.