செய்திகள்

மத்திய அரசின் ஜீப் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது: வைகோ

Published On 2016-11-04 13:04 IST   |   Update On 2016-11-04 13:04:00 IST
மத்திய அரசின் ஜீப் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது என்று சென்னை விமான நிலையத்தில் வைகோ பேட்டியளித்துள்ளார்.
ஆலந்தூர்:

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது.

கேள்வி:- முதல்- அமைச்சர் ஜெயலலிதா முன்பு மத்திய அரசு கொண்டு வந்த உணவு பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி மசோதாவை ஆதரிக்கவில்லை. தற்போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தமிழக அரசு ஆதரவு தந்துள்ளது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்:- உணவு பாதுகாப்பு மற்றும் ஜி.எஸ்.டி மசோதாக்களுக்கு தமிழகம் ஆதரவு தந்து இருக்கிறது என்பது மாநிலத்திற்கு பல்வேறு நல்லது எது என்று யோசித்து முடிவு எடுத்து இருக்கக்கூடும். இது முதல்வருடைய கவனத் திற்குட்பட்டு தான் முடிவு எடுக்க கூடும்.

முதல்-அமைச்சருடைய இலாக்காக்கள் கட்சியின் மூத்த தலைவர், ஏற்கனவே இந்த பதவிகளை வகித்த ஓ. பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அவரது செயல்பாடுகள் ஒரே மாதிரியாகதான் உள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த ஜீப் தேர்தலில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். ஏழை -எளிய மாணவர்கள் மருத்துவ கல்வி பயிலுவதற்கு வாய்ப்பு தர வேண்டும், சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும். பணத்தை கொடுத்து சேரலாம் என்ற நிலை இருக்கக் கூடாது. அதனால் தமிழகம் பாதிப்பு அடைய கூடாது. தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க இரண்டு ஆட்சிகளிலும் கொலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News