செய்திகள்

திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: சித்தப்பா மீது புகார்

Published On 2016-11-03 16:46 IST   |   Update On 2016-11-03 16:46:00 IST
திருப்பத்தூர் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சித்தப்பாவை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பத்தூர்:

வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகன் சரவணன் (வயது 42). கூலித் தொழிலாளி. சரவணன் மனைவியின் அக்காள் திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு கிராமத்தில் கணவருடன் வசித்து வருகிறார்.

அவருக்கு, 9 வயதில் மகள் இருக்கிறார். நேற்று முன்தினம் சரவணன், மனைவியின் அக்காள் வீட்டிற்கு சென்றார். இரவு அங்கேயே தங்கினார். சரவணன் சித்தப்பா முறை என்பதால் அவருடன் சிறுமி விளையாடினார். சரவணன் அருகிலேயே சிறுமி படுத்து உறங்கினார்.

நள்ளிரவில் சிறுமி மற்றும் அவரது பெற்றோர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். அப்போது, சரவணன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது. மறுநாள் காலை விடிந்தவுடன் அவரச, அவரசமாக சரவணன் ஊருக்கு கிளம்பி சென்று விட்டார்.

அதன்பிறகே, தங்களது மகளுக்கு சரவணன் பாலியல் தொல்லை கொடுத்தது பெற்றோருக்கு தெரிய வந்தது. இதுகுறித்து குரிசிலாப்பட்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட சரவணனை தேடி வருகிறார்கள்.

Similar News