செய்திகள்
கானத்தூர் அருகே பள்ளி வேன் மீது அரசு விரைவு பஸ் மோதல்: 10 பேர் காயம்
கானத்தூர் அருகே பள்ளி வேன் மீது அரசு விரைவு பஸ் மோதிய விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
திருவான்மியூர்:
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை 12 மணிக்கு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கானத்தூர் எம்.ஜி.எம். அருகே பஸ் வந்த போது தனியார் பள்ளி வேன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் இடது புறம் திரும்பி மின் கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேனில் மாணவ- மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை 12 மணிக்கு அரசு விரைவு பஸ் வந்து கொண்டிருந்தது. கானத்தூர் எம்.ஜி.எம். அருகே பஸ் வந்த போது தனியார் பள்ளி வேன் மீது பஸ் பயங்கரமாக மோதியது. கட்டுப்பாட்டை இழந்த பஸ் இடது புறம் திரும்பி மின் கம்பத்தில் மோதி நின்றது.
இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி வேனில் மாணவ- மாணவிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.