செய்திகள்

இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது: தமிழக மீனவ பிரதிநிதிகள் பேட்டி

Published On 2016-11-03 09:51 GMT   |   Update On 2016-11-03 09:51 GMT
டெல்லியில் நடந்த இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை திருப்தி அளிக்கிறது என்று தமிழக மீனவ பிரதிநிதிகள் பேட்டியளித்துள்ளனர்.
ஆலந்தூர்:

புதுடெல்லியில் நேற்று தமிழக, இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் பேச்சு வார்த்தை நடந்தது.

இதில் பங்கேற்று சென்னை திரும்பிய தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

டெல்லியில் நடந்த இரு நாட்டு மீனவர்கள் சங்க பிரதிநிதிகள் கூட்டம் நல்ல முறையில் நடந்தது. மீனவர்கள் பிரச்சனைகள் குறித்து இரு நாட்டு மீனவர்களும் மனம் திறந்து பேசினோம். அனேக வி‌ஷயங்களை பரிமாறி கொண்டோம்.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 114 படகுகள் மீட்க வேண்டும். 83 நாட்களுக்கு மூன்று வருடத்துக்கு இந்திய எல்லையில் மீன் பிடிப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினோம்.

வருகிற 5-ந்தேதி இந்தியா- இலங்கை வெளியுறவு அமைச்சர்கள், மீனவ துறை அமைச்சர்கள் பேச இருக்கிறார்கள். அதில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருக்கிறார்கள்.

மீனவர் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்படும். மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு அடையாத வகையில் முடிவு எடுக்கப்படும் என்று கூறி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Similar News