செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்கள் மோதல்: வாலிபர் பலி

Published On 2016-10-31 14:07 IST   |   Update On 2016-10-31 14:07:00 IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே பஸ்கள் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி இன்று மதியம் அரசு பஸ் சென்றது. தண்டலம் அருகே சென்ற போது செய்யாறில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் முந்தி செல்ல முயன்றது.

அப்போது முன்னாள் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது இடித்து 2 பஸ்களும் மோதின. இதில் பஸ்களுக்கு மத்தியில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் உடல் நசுங்கி பலியானர். மேலும் பஸ்களில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.

பலியான வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும் அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News