செய்திகள்
காஞ்சீபுரம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலி
காஞ்சீபுரம் அருகே தீயில் கருகி இளம்பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த புள்ளலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி கனகா (வயது 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடம் ஆகிறது.
தீபாவளியையொட்டி நேற்று காலை கனகா பலகாரம் செய்ய வீட்டின் வெளியே விறகு அடுப்பை பற்றவைத்தார். எதிர் பாராதவிதமாக கனகாவின் புடவையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமள வென்று பரவியதால் படுகாயம் அடைந்த அவர் உடல் கருகி அலறினார்.
அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.