செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகை பறிப்பு

Published On 2016-10-26 16:37 IST   |   Update On 2016-10-26 16:37:00 IST
வீட்டில் தனியே இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் நகையை பறித்த மர்ம வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா பூலாங்குறிச்சி கக்கன்நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது தாயார் அழகம்மை (வயது86).

நேற்று மாலை இவர் வீட்டின் வெளியே உள்ள திண்ணையில் தனியே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம வாலிபர்கள், குடிக்க தண்ணீர் கேட்டனர். தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்ற அழகம்மையிடம் அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம வாலிபர்கள் தப்பிவிட்டனர்.

இது குறித்து பூலாங்குறிச்சி போலீசில் மூதாட்டியின் மகன் பழனிச்சாமி புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்குப்பதிவு செய்து நகை பறித்த வாலிபர்களை தேடி வருகிறார்.

Similar News