செய்திகள்

ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து பெண் பலி

Published On 2016-10-25 14:51 IST   |   Update On 2016-10-25 14:51:00 IST
ஜெயங்கொண்டத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் காந்தி நகரைச் சேர்ந்த கந்தன் மகன் சந்திரமோகன். இவர் நேற்று முன்தினம் தனது தாய் காசியம்மாளை பைக்கின் பின்னால் உட்காரவைத்துக் கொண்டு கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது ரோட்டில் உள்ள பள்ளத்தில் பைக் ஏரி இறங்கியதில் காசியம்மாள் வண்டியிலிருந்து பின்பக்கம் கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தஞ்சை மருத்து வக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் காசியம்மாள் இறந்து விட்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News