செய்திகள்

கார் மோதி சிறுவன் பலியான வழக்கில் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

Published On 2016-10-20 22:28 IST   |   Update On 2016-10-20 22:28:00 IST
ஜெயங்கொண்டம் அருகே கார் மோதி சிறுவன் பலியான வழக்கில் கார் டிரைவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிந்தாமணி காலனி தெருவை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சரண் (வயது 8). இவர் கடந்த 2015–ம் ஆண்டு ஜூலை மாதம் 26–ந் தேதி கும்பகோணம்–ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்ததான்.

அப்போது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக சரண் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சரண் இறந்தான். இச்சம்பவம் குறித்து தா.பழூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த வித்தியாசரண் (38) என்பவரை கைது செய்தனர்.

இதுதொடர்பாக வழக்கு ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கானது விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு மதிவாணன் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் வித்தியாசரணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.

Similar News