செய்திகள்

பேராவூரணியில் அரசு பஸ் மோதி விவசாயி பலி

Published On 2016-10-14 10:51 GMT   |   Update On 2016-10-14 10:51 GMT
பேராவூரணியில் அரசு பஸ் மோதி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேராவூரணி:

பேராவூரணி செல்வவிநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜப்பா (67). விவசாயி சம்பவத்தன்று பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ராஜப்பா சைக்கிள் மீது மோதியது இதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது பற்றி ராஜப்பாவின் மருமகள் சசிகலா அளித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News