செய்திகள்
பொன்னமராவதி அருகே குடிசை வீட்டில் தீ விபத்து
பொன்னமராவதி அருகே குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டில் இருந்த தளாவடப்பொருட்கள் மற்றும் வைக்கோல் எரிந்து சேதமாயின.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டியைச்சேர்ந்த கட்டையன் (வயது65). வைக்கோல் போரில் ஆண குடிசைவீட்டில் வசதித்து வந்துள்ளார். நேற்று வீட்டில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே அக்கம்பக்கம் உள்ளவர்கள் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதன் பேரில் தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்துள்ளனர். ஆனால் இந்த வீட்டில் இருந்த தளாவடப்பொருட்கள் மற்றும் வைக்கோல் எரிந்து சேதமாயின.
தீப்பற்றி எரிந்த தகவல் கிடைத்த தாசில்தார் மோகன்குமார், ஆர்.ஐ.சேர், வி.ஏ.ஓ.பாண்டியன்,ஊராட்சித்தலைவர் சோலையப்பன் ஆகியோர் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு அரசின் நிவாரண உதவிகள் வழங்கினர்.