செய்திகள்
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருமயம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருமயம்:
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் ஹமீது வாலிபரான இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தெம்மாபட்டியை சேர்ந்த தனது நண்பர் தாரிக் ஆஸிஸ்வுடன் புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருமயம் பட்டணம் முக்கத்தில் உள்ள கண்மாயில் நிலை தடுமாறி விழுந்தார். இந்த விபத்தில் அப்துல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாரிக் ஆஸிஸ் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருமயம் போலீசார் விபத்தில் காயமடைந்த தாரிக் ஆஸிஸை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அப்துல் ஹமீது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் ஹமீது வாலிபரான இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தெம்மாபட்டியை சேர்ந்த தனது நண்பர் தாரிக் ஆஸிஸ்வுடன் புதுக்கோட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருமயம் பட்டணம் முக்கத்தில் உள்ள கண்மாயில் நிலை தடுமாறி விழுந்தார். இந்த விபத்தில் அப்துல் ஹமீது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாரிக் ஆஸிஸ் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.
இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருமயம் போலீசார் விபத்தில் காயமடைந்த தாரிக் ஆஸிஸை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்தில் பலியான அப்துல் ஹமீது உடலை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.