செய்திகள்

பீர்க்கன்கரணையில் மொபட்டில் வாலிபருடன் வந்து நகை பறித்த இளம்பெண்

Published On 2016-10-03 06:57 GMT   |   Update On 2016-10-03 06:57 GMT
பீர்க்கன்கரணையில் மொபட்டில் வாலிபருடன் வந்து இளம்பெண் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தாம்பரம்:

பீர்க்கன்கரணை ஏ.எஸ்.ராஜன் நகரில் வசித்து வருபவர் தங்கபாண்டி. இவரது மனைவி முத்து வடிவு. நேற்று மாலை முத்துவடிவு அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது பின்னால் இளம்பெண் மொபட்டை ஓட்டி வந்தார். அவருடன் வாலிபர் ஒருவரும் இருந்தார்.

முத்துவடிவு அருகே மொபட்டை இளம்பெண் ஓட்டினார். அப்போது இளம்பெண்ணுடன் இருந்த வாலிபர் திடீரென முத்துவடிவு கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை பறித்தான்

பின்னர் இருவரும் மொபட்டில் தப்பிச் சென்றுவிட்டனர். அதிர்ச்சி அடைந்த முத்துவடிவு கூச்சலிட்டார். நகை பறிப்பில் வாலிபருடன் இளம்பெண்ணும் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பீர்க்கன் கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News