செய்திகள்

திருப்போரூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து வாலிபர் பலி

Published On 2016-09-30 15:26 IST   |   Update On 2016-09-30 15:26:00 IST
திருப்போரூர் அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
திருப்போரூர்:

திருப்போரூரை அடுத்த ஆலத்தூரில் உள்ள சிப்காட் பகுதியில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. ஆலத்தூரை சேர்ந்த முருகன் (வயது 34). தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்தபோது திடீரென பாய்லர் வெடித்தது. இதில் முருகன், மேலாளர்கள் அருள் கிருஷ்ண பிரசாத், சதீஷ், ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அவர்களை மற்ற ஊழியர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முருகன் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையே முருகனின் உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆலுத்தூரில் உள்ள சிப்காட் வளாக வாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முருகனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். அது வரை முருகனின் உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசாரும், தொழிற்காலை நிர்வாகத்தினரும் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

Similar News