செய்திகள்

ஸ்ரீபெரும்புதூரில் தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் குண்டுவீச்சு

Published On 2016-09-30 12:45 IST   |   Update On 2016-09-30 12:45:00 IST
ஸ்ரீபெரும்புதூரில் தே.மு.தி.க. பிரமுகர் வீட்டில் குண்டுவீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

ஸ்ரீபெரும்புதூரில் வசித்து வருபவர் சசிகுமார். தே.மு.தி.க. ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இன்று அவரது வீடு மீது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். குண்டுகள் பலத்த சத்தத்துடன் வெடித்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல் உடனே தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News