செய்திகள்
உத்திரமேரூரில் நகைக்கடை உள்பட 6 இடங்களில் வருமான வரி சோதனை
உத்திரமேரூர் பஜாரில் சரவணா பாத்திரக்கடை, விமலா ஜூவல்லர்ஸ், பாலாஜி டைல்ஸ், பாரஸ் ஜூவல்லரி மற்றும் 2 கடைகள் உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூர் பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன.
நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சரவணா பாத்திரக்கடை, விமலா ஜூவல்லர்ஸ், பாலாஜி டைல்ஸ், பாரஸ் ஜூவல்லரி மற்றும் 2 கடைகள் உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை, காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தம் 20 பேர் தனித்தனி குழுவாக 6 கடைகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி ஆவணங்களை சரி பார்த்தனர்.
ஒரே நேரத்தில் 6 கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனை நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஞ்சீபுரத்தை அடுத்த உத்திரமேரூர் பஜாரில் ஏராளமான கடைகள் உள்ளன.
நேற்று மாலை அப்பகுதியில் உள்ள சரவணா பாத்திரக்கடை, விமலா ஜூவல்லர்ஸ், பாலாஜி டைல்ஸ், பாரஸ் ஜூவல்லரி மற்றும் 2 கடைகள் உள்பட 6 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சென்னை, காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் மொத்தம் 20 பேர் தனித்தனி குழுவாக 6 கடைகளிலும் ஒரே நேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அவர்கள் கடையில் இருந்த ஊழியர்கள், வாடிக்கையாளர்களை வெளியேற்றி ஆவணங்களை சரி பார்த்தனர்.
ஒரே நேரத்தில் 6 கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சோதனை நள்ளிரவு 11 மணி வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.