செய்திகள்

மணல்மேட்டில் 27-ந் தேதி மின் நிறுத்தம்

Published On 2016-09-27 14:37 IST   |   Update On 2016-09-27 14:37:00 IST
மணல்மேட்டில் 27-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை அருகே உள்ள மணல் மேடு துணை மின் நிலையத்தில நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

இதனால் இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான மணல்மேடு, ராதா நல்லூர், கிழாய், கடலங்குடி, பட்டவர்த்தி, மண்ணிப்பள்ளம், வடவஞ்சார், கொற்கை,காளி, பந்த நல்லூர், திருமங்கலம், சித்தமல்லி, முடிகண்ட நல்லூர், திருச்சிற்றம்பலம் ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

இந்த தகவல் மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கு. சந்தான கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Similar News