செய்திகள்
திருப்போரூர் அருகே மாடு மேய்ந்த தகராறில் கோஷ்டி மோதல்: 5 பேர் கைது
திருப்போரூர் அருகே மாடு மேய்ந்த தகராறில் கோஷ்டி மோதலில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த ஆமூர் முந்திரிதோப்பு பகுதியைச்சேர்ந்தவர் பூபதி இவருக்கு சொந்தமான மாடு அதே பகுதியைச் சேர்ந்த ராணியின் வயலில் மேய்ந்தது.
இது தொடர்பாக ராணி, பூபதி தரப்பினர் மானாம்பதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்ட போது இரு தரப்பினருக்கும் போலீஸ் நிலைய வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
இதில் பூபதி தலையில் காயம் ஏற்பட்டது. இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மானாம்பதி போலீசார் வழக்குபதிவு செய்து ராணியின் மகன் ஞானபிரகாசம் அவருடைய நண்பர்கள் ரஞ்சித், மதன், மற்றொருதரப்பை சேர்ந்த பூபதியின் தம்பி சண்முகம் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.