செய்திகள்

சீர்காழி பகுதி கோவில்களில் அ.தி.மு.க.வினர் சிறப்பு வழிபாடு

Published On 2016-09-25 16:45 IST   |   Update On 2016-09-25 16:45:00 IST
சீர்காழி பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடந்து நலமுடன் வாழ வேண்டும் என அ.தி.மு.க.வினர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.

சீர்காழி:

சீர்காழி சட்டைநாதர்கோயிலில் அருள்பாலிக்கும் முத்துசட்டைநாதருக்கு அ.தி.மு.க. சார்பில் சிறப்பு வழிபாடு நகர செயலாளர் பக்கிரிசாமி தலைமையில் நடைப்பெற்றது.ஜெயலலிதா பேரவை செயலாளர் மணி, ஜெயலலிதா பேரவை தலைவர் ராசு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து முத்து சட்டைநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

இதில் பேராசிரியர்.ஜெயராமன், மாவட்ட தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் பரணிதரன், மாவட்ட பிரதிநிதி கார்த்தி,வக்கீல் நெடுஞ்செழியன், நிர்வாகிகள் விஜி, பரக்கத்அலி, முரளி, கிருஷ்ணமூர்த்தி, ராகவன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

இதேபோல் சீர்காழி ஆபத்துகாத்தவிநாயகர் கோவிலில் அண்ணா ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் தொழிற்சங்கம் சார்பில் சிறப்பு வழிபாடு அதன் தலைவர் மலையப்பன் தலைமையில் நடைப்பெற்றது. செயலாளர் குண்டுபிள்ளை, பொருளாளர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சிதறுதேங்காய் உடைத்தும், தீபங்கள் ஏற்றியும் அ.தி.மு.க. வினர்கள் முதல்வர் நலம்பெற வேண்டி பிராத்தனைகள் செய்தனர். புற்றடி மாரியம்மன்கோவிலில் முதலமைச்சர் ஜெயலலிதா பூர்ணகுணமடைய சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. தொடர்ந்து அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. இதில் நகர துணை செயலாளர் வேணுகோபால், நகர அவைத்தலைவர் ராமலிங்கம், நிர்வாகிகள் லாட்ஜ்.மணி, ரவிசண்முகம், சீனுவாசன் சுரேஷ், ராஜ்கண்ணன் கலந்துக்கொண்டு வழிப்பட்டனர்.

சீர்காழி நாகேஸ்வர முடையார் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைப்பெற்றது. இதில் முன்னாள் கவுன்சிலர் சேகர், பன்னீர்செல்வம், தங்கராசு, செந்தில்குமார் உள்ளிட்ட அ.தி.மு.க. வினர்கள் கலந்துக்கொண்டு முதலமைச்சர் பெயரில் சங்கல்பம், அர்ச்சனைகள் செய்து வழிப்பட்டனர். வடபாதி மாரியம்மன் கோவிலில் அதிமுக மாவட்ட பிரதிநிதி லெட்சுமி தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்து, நெய்தீபங்கள் ஏற்றி வழிப்பட்டனர். நகர்மன்ற தலைவர் இறைஎழில் உள்ளிட்டோர் பங்கேற்று வழிப்பட்டனர்.

கடைவீதி செல்வ விநாயகர் கோவிலில் நகர்மன்ற துணை தலைவர் தமிழ்செல்வம் தலைமையில் நடைப்பெற்ற சிறப்பு வழிப்பாட்டில் திரளான அ.தி.மு.க.வினர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர். சீர்காழி தாடாளன் பெருமாள் கோவிலிலும் தமிழக முதல்வர் ஜெயலலிதா குணமடைந்து நலமுடன் வீடு திரும்பவேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

Similar News