செய்திகள்

சாலையை சீர் செய்ய கோரி குன்றத்தூரில் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2016-09-24 13:02 IST   |   Update On 2016-09-24 13:03:00 IST
குன்றத்தூரில் சாலையை சீர் செய்ய கோரி தாம்பரம்- சோமங்கலம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர்:

குன்றத்தூர் வரதராஜ புரத்தில் சுமார் 1200 பேர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை சீர் செய்ய பொது மக்கள் குன்றத்தூர் ஊராட்சி அதிகாரியிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று காலை தாம்பரம்- சோமங்கலம் சாலையில் குன்றத்தூர் வரதராஜ புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலை சீர் செய்யப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News