செய்திகள்
தூத்துக்குடியிலிருந்து விருத்தாசலத்துக்கு ரெயிலில் 928 டன் உரம் வந்தது
தூத்துக்குடியில் இருந்து 620 டன் பொட்டாஷ், 185 டன் டி.ஏ.பி, 123 டன் காம்ள’ஸ் ஆகிய உரங்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்கியது.
விருத்தாசலம்:
ஆடிமாதம் முடிந்து தற்போது மழைபெய்து வருவதால் விவசாயிகள் சாகுபடி பணிகளை ஆரம்பித்துள்ளனர். விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தூத்துக்குடி, சென்னை மணலி, ஆந்திரா, ஒரிசா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து யூரியா, உரங்களை இறக்குமதி செய்து வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடியில் இருந்து 620 டன் பொட்டாஷ், 185 டன் டி.ஏ.பி, 123 டன் காம்ள’ஸ் ஆகிய உரங்கள் விருத்தாசலம் ரெயில் நிலையத்திற்கு வந்திறங்கியது.
இந்த உர மூட்டைகளை அங்கிருந்த பணியாளர்கள் லாரிகளில் ஏற்றி கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தனியார் உரக்கடைகள், உரக்கிடங்குகளுக்கு அனுப்பி வைத்தனர்.