காதல் திருமணம் செய்த மனைவியை தவிக்க விட்டு சென்ற கணவர் கைது
வேதாரண்யம்:
திருவாரூர் மாவட்டம் கச்சனம் பகுதியை சேர்ந்தவர் கலியபெருமாள். இவரது மகன் பழனி (24). இவர் திருவாரூர் திரு.வி.க. கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தார்.
அதே கல்லூரியில் வேதாரண்யம் அருகே உள்ள நெய் விளக்கு பகுதியை சேர்ந்த முருகையன் மகள் பிரதீபாவும் (22) படித்து வந்தார். இருவருக்கும் காதல் ஏற்பட்டது.
கடந்த 21.11.15 அன்று இருவரும் வேதாரண்யத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பழனி தனது மாமனார் வீட்டில் தங்கி விட்டார்.
இவர் கடந்த 19.12.15 அன்று சென்னைக்கு வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக பிரதீபா வேதாரண்யம் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் நேற்று பழனி தனது தந்தை வீடான கச்சனத்திற்கு வந்து இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. அவர்கள் கச்சனம் சென்று பழனியை கைது செய்து வேதாரண்யம் அழைத்து வந்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.