செய்திகள்

துரைப்பாக்கத்தில் படுக்கை அறையில் வாலிபர் மர்மசாவு: போலீசார் விசாரணை

Published On 2016-09-22 13:14 IST   |   Update On 2016-09-22 13:14:00 IST
துரைப்பாக்கத்தில் படுக்கை அறையில் வாலிபர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவான்மியூர்:

சென்னை துரைப்பாக்கம் அறிஞர் அண்ணாநகர் கெனால்புரம் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின் (வயது 30) தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இவரது சொந்த ஊர் தஞ்சாவூர் ஆகும். இவருக்கு 2 மனைவிகள். ஒரு மனைவி தஞ்சாவூரில் வசிக்கிறார். மற்றொரு மனைவியுடன் ஸ்டாலின் சென்னையில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

நேற்று இரவு ஸ்டாலின் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஸ்டாலின் ஒரு அறையிலும், அவரது மனைவி மற்றொரு அறையிலும் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் ஸ்டாலின் தூங்கிய அறைக்கு அவரது மனைவி சென்று பார்த்தார். அப்போது ஸ்டாலின் தரையில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்தில் தூக்கு கயிறு காணப்பட்டது. உடலில் நகக் கீறல்கள் இருந்தன.

இது தொடர்பாக அவரது மனைவி துரைப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஸ்டாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News