செய்திகள்

ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை

Published On 2016-09-21 10:46 IST   |   Update On 2016-09-21 10:46:00 IST
ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:

சேலத்திலிருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஸ்வரி, நாகஜோதி, ஜெயகவுரி ஆகியோர் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுவரை எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் கடலூர் சி.பி.சி.ஐ.டி இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான போலீசார் தொடர்ந்து விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரித்து வருகின்றனர். ரெயிலில் கொள்ளை சம்பவம் நடந்த அன்று பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள், மெயில் சர்வீஸ் ஊழியர்கள் ஆகியோருடன் தொடர் விசாரணை நடத்தினார்.

மேலும் ஜங்‌ஷன் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் விசாரணை மேற்கொண்ட அவர் கொள்ளை நடந்த ரெயில் நின்ற முதலாவது பிளாட்பாரத்திற்கு சென்று தீவிர ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News