செய்திகள்

பொள்ளாச்சியில் ரெயில் மறியல் போராட்டம்: விடுதலை சிறுத்தைகள் கைது

Published On 2016-09-16 10:22 GMT   |   Update On 2016-09-16 10:22 GMT
கர்நாடகா மாநிலத்தில் நடந்த தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

பொள்ளாச்சி:

கர்நாடகா மாநிலத்தில் நடந்த தமிழர்கள் மீதான தாக்குதலை கண்டித்து பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இன்று காலை 10.15 மணிக்கு பாலக்காடு செல்லும் பழனி எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு அமர்ந்து அவர்கள் மறியல் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் பிரபு தலைமை தாங்கினார்,

இதைதொடர்ந்து பொள்ளாச்சி போலீஸ் டி.எஸ்.பி. நீலக்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் , மறியல் போராட்டம் நடத்திய 18 பேரை கைது செய்தனர்.

Similar News