செய்திகள்

மயிலாடுதுறை அருகே விபத்தில் கூலித் தொழிலாளி பலி

Published On 2016-09-02 16:03 IST   |   Update On 2016-09-02 16:03:00 IST
மயிலாடுதுறை அருகே விபத்தில் கூலித் தொழிலாளி பலியானார்.விபத்தில் இறந்த தொழிலாளிக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மணல்மேடு வக்கார மாரி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (45). கூலித் தொழிலாளி.

இவர் தனது நண்பர் கள்ளழகருடன் நேற்று இரவு ராதா நல்லூருக்கு துக்க வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

மணல்மேடு முட்டம் பாலத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த டாடா ஏ.சி. வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளின் பின்புறம் அமர்ந்து இருந்த மணிமாறன் கீழே விழுந்தார். தலையில் பலத்த அடிபட்டதால் அவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார். இது குறித்து மணல்மேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

விபத்தில் இறந்த மணிமாறனுக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Similar News