செய்திகள்

வேதாரண்யம் அருகே குழந்தையுடன் தாய் மாயம்: போலீசில் மாமனார் புகார்

Published On 2016-09-01 15:51 IST   |   Update On 2016-09-01 15:51:00 IST
வேதாரண்யம் அருகே குழந்தையுடன் தாய் மாயமானது குறித்து மாமனார் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணையும் அவரது குழந்தையையும் தேடி வருகிறார்கள்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல்சரகம் பண்ணாள் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவருக்கும் ஆயக்காரன்புலம் 4-ம் சேத்தி கோவில்குளம் பகுதியை சேர்ந்த சீபா (25) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு ஆண் குழந்தை உள்ளது.

மணிகண்டனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் மனைவி, குழந்தையை தனது தந்தை பாலசுப்பிரமணியன் பாதுகாப்பில் விட்டு சென்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீபா குழந்தையுடன் கடைக்கு சென்று வருவதாக மாமனார் பாலசுப்பிரமணியத்திடம் கூறிவிட்டு சென்றுள்ளார்.

பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை அவரை பாலசுப்பிரமணியன் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள்பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து வாய்மேடு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணையும் அவரது குழந்தையையும் தேடி வருகிறார்.

Similar News