செய்திகள்

திருவண்ணாமலையில் ரெயில் மோதி பெண் உடல் சிதறி பலி

Published On 2016-08-20 11:05 GMT   |   Update On 2016-08-20 11:05 GMT
திருவண்ணாமலையில் தண்டவாளத்தை கடந்த பெண் ரெயில் மோதியதில் உடல் சிதறி பலியானார்.

திருவண்ணாமலை:

கர்நாடக மாநிலம் சிமோகா நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நாகம்மா (வயது 40). இவர் பாண்டிச்சேரிக்கு சென்று விட்டு திருவண்ணாமலை பெருமாள் நகரில் வசிக்கும் உறவினர் மஞ்சுளா வீட்டுக்கு செல்வதற்காக இன்று அதிகாலை ரெயில் மூலம் திருவண்ணாமலைக்கு வந்தார்.

பெருமாள் நகரில் உள்ள உறவினர் வீட்டின் அருகே சென்றபோது, அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு வந்த பயணிகள் ரெயில் மோதியது. இந்த விபத்தில் நாகம்மா சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ரெயில்வே போலீசார், நாகம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News