செய்திகள்
மாமல்லபுரம் அருகே சாராயம் கடத்தியவர் கைது
மாமல்லபுரம் அருகே சாராயம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே, எச்சூர் கூட்ரோட்டில் மாமல்லபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது திருவண்ணாமலை மாவட்டம் அவலூர் பேட்டையில் இருந்து வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கேன்களில் சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது.
இதையடுத்து வேனில் இருந்த திரவியத்தை போலீசார் கைது செய்தனர். மினி வேன், சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.