செய்திகள்

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆண்டிமடத்தில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-07-30 22:23 IST   |   Update On 2016-07-30 22:23:00 IST
ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கோவில் வாழ்க்கை கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம் :

ஆண்டிமடம் ஒன்றியத்திற்குட்பட்ட கோவில் வாழ்க்கை கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட செயலாளர்கள் அரியலூர் கண்ணன், பெரம்பலூர் செந்தில்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய துணைச்செயலாளர் சின்னதுரை துவக்கி வைத்தார். தலைமை கழக பேச்சாளர் ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர்கள் ராமநாதன், ராமச்சந்திரன், தங்கராசு, நக்கீரன், ஜெயங்கொண்டம் சுந்தரமூர்த்தி, கொளஞ்சி, மற்றும் நிர்வாகிகள் கோகுல், செந்தில், ராமசாமி, ராசு, பவுல்ராஜ், குணசேகரன் மற்றும் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட 200– க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிளை செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.

Similar News