செய்திகள்

மடிப்பாக்கம் அருகே கழிவு நீர் லாரி மோதி கேன்டீன் ஊழியர் பலி

Published On 2016-07-30 14:34 IST   |   Update On 2016-07-30 14:34:00 IST
மடிப்பாக்கம் அருகே கழிவு நீர் லாரி மோதி கேன்டீன் ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவான்மியூர்:

மடிப்பாக்கம் அன்னை தேவி நகரைச்சேர்ந்தவர் விஜய் (22). இவரது நண்பர் கெவின் ராஜ் (21) இருவரும் தரமணியில் ஐ.டி. கம்பெனி கேன்டீனில் பணி புரிந்து வந்தனர். இன்று காலை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் சோழிங்க நல்லூர், பெருங்குடி சாலையில் வந்த போது கழிவு நீர் லாரி மோதியது.

இதில் விஜய் சம்பவ இடத்தில் பலியானார். கெவின்ராஜூக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தப்பி ஓடிய லாரி டிரைவர் ராஜவேலுவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Similar News