செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் 50 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்:
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து வழியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் அனுப்ப இருந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்த போது அதில் ஏதோ உயிருடன் ஊர்ந்து செல்வது போல் தெரிந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்சலில் இருந்த சுமார் 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பார்சலில் இருந்த முகவரிக்கு சென்றபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. கடத்தல் கும்பல் அந்த நட்சத்திர ஆமைகளை போலி முகவரி மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
நட்சத்திர ஆமைகள் பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்த உடன் அவர்களிடம் பிடிபட்ட நட்சத்திர ஆமைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் இருந்து மலேசியாவுக்கு கடத்த முயன்ற 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து வழியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் அனுப்ப இருந்த பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையில் இருந்து மலேசியாவுக்கு ஒரு பார்சல் அனுப்பப்பட்டு இருந்தது. அந்த பார்சலில் வீட்டு உபயோக பொருட்கள் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை சுங்க இலாகா அதிகாரிகள் ‘ஸ்கேனிங்’ செய்த போது அதில் ஏதோ உயிருடன் ஊர்ந்து செல்வது போல் தெரிந்தது.
இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பார்சலை பிரித்து பார்த்தனர். அதில் உயிருடன் நட்சத்திர ஆமைகள் இருந்ததை கண்டுஅதிர்ச்சி அடைந்தனர். அந்த பார்சலில் இருந்த சுமார் 50 நட்சத்திர ஆமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பார்சலில் இருந்த முகவரிக்கு சென்றபோது அது போலியான முகவரி என தெரியவந்தது. கடத்தல் கும்பல் அந்த நட்சத்திர ஆமைகளை போலி முகவரி மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.
நட்சத்திர ஆமைகள் பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் வந்த உடன் அவர்களிடம் பிடிபட்ட நட்சத்திர ஆமைகள் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.