செந்துறை அருகே குடும்பத் தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை
செந்துறை:
செந்துறை அருகே உள்ள குவாகம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 44) இவரது மனைவி ராஜேஸ்வரி (30) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
வல்லம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிலேயே கணேசன் வசித்து வந்தார். இந்நிலையில்கணவன்– மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குடிபோதையில் இருந்த கணேசன் நேற்று இரவு 7.40 மணி அளவில் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் அவரின் உடல் முழுதும் பற்றி எரிந்தது. பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தகவல் அறிந்த குவாகம் போலிசார் உடலை கைப்பற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி குவாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.