அரியலூர் மாவட்ட நீதிமன்றங்களில் பழுதடைந்த தளவாட சாமான்கள் அடுத்த மாதம் ஏலம்
அரியலூர்:
அரியலூர் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:–
அரியலூர் மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் உள்ள பழுதடைந்த தளவாட சாமான்கள் (சேர், டேபிள், பீரோ போன்றவை) ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. மர சேர், இரும்பு சேர், ஒயர் சேர், ஸ்டீல் சேர், ரோலிங் சேர், மர டேபிள், மர பெஞ்ச், ஸ்டீல் பெஞ்ச், மர டெஸ்க், ஸ்டீல் பீரோ உள்ளிட்ட 223 பொருட்கள் ஏலத்தில் விடப்பட உள்ளது.
அதன் அடிப்படையில் பழுதடைந்த தளவாட சாமான்களின் விபர பட்டியலுடன் நேரில் சரிபார்த்து ஏலம் எடுக்க விரும்புவோர் 15 நாட்களுக்குள் நீதிமன்ற அலுவலக நாட்களில் முதன்மை நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
நிர்வாக அதிகாரி முன்னிலையில் அரியலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள தளவாட பொருட்களை காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பார்வையிட்டு பின்பு அதன் மதிப்பீடு பட்டியலை தனிக் கவரில் சீல் வைத்து முதன்மை மாவட்ட நீதிபதி, அரியலூர் என்ற விலாசத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ 5.8.2016–க்குள் அனுப்பி வைக்கவேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் வரும் இது சம்பந்தமான வேறு ஏதேனும் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதிக மதிப்பீடு வழங்குபவருக்கு பட்டியலில் உள்ள தளவாட சாமான்கள் வழங்கப்படும். தளவாட பொருட்களுக்கு அதிக மதிப்பீடு வழங்கிய நபர் உடனடியாக தொகையை செலுத்தி அவர் செலவிலேயே பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்கப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.