செய்திகள்

கல்லல் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீர் மாயம்: போலீசார் விசாரணை

Published On 2016-07-24 16:05 IST   |   Update On 2016-07-24 16:05:00 IST
கல்லல் அருகே கல்லூரிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள மானக்காடு கிராமத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் பிரேமா (வயது19). இவர் அமராவதி புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வந்தார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பிரேமா பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்தியமூர்த்தி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை.

இது குறித்து அவர் கல்லல் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து மாணவி தானாகவே எங்கேனும் சென்றாரா? அல்லது கடத்தப்பட்டாரா? என விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News