செய்திகள்

சிவகங்கையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் போலீசுக்கு கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

Published On 2016-07-22 22:51 IST   |   Update On 2016-07-22 22:51:00 IST
கூடுதல் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் போலீஸ் கொடுத்த புகாரின் பேரில் கணவர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள பகையஞ்சான் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி. மதுரை பட்டாலியனில் போலீஸ்காராக உள்ளார்.

இவருக்கும், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் 2013–ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 40 பவுன் நகை, ரூ. 2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் தேன்மொழி, சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்து உள்ளார்.

அதில், கணவர் சுரேஷ் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு தொந்தரவு செய்து வருகிறார். இதற்கு உடந்தையாக அவரது தந்தை ராமச்சந்திரன், தாயார் பிச்சாயி, தங்கை சுகன்யா ஆகியோர் உள்ளனர். மேலும் வரதட்சணை பிரச்சினையில் கொலை மிரட்டல் எனக்கு விடுத்தாகவும் கூறியுள்ளார்.

இதுகுறித்து சப்–இன்ஸ் பெக்டர் ராஜேஸ்வரி விசாரணை நடத்தி சுரேஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளர்.

Similar News