செய்திகள்

ஈரோடு மாநகர் முழுவதும் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2016-07-22 17:53 IST   |   Update On 2016-07-22 17:53:00 IST
ஈரோட்டில் மின்பாதைகளில் பராமரிப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு 110–22 கி.வோ. துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி மற்றும் 22 கி.வோ மின்பாதைகளில் பராமரிப்பு மற்றும் விஸ்தரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டும் கீழ் கண்ட பகுதிகளில் மின்சாரம இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன் சத்திரம், இடையன் காட்டு வலசு, முனிசிபல் காலனி, வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், சம்பத் நகர், பெரிய வலசு, கருங்கல்பாளையம், நாராயண வலசு, சாஸ்திரி நகர், குமரன், நகர், ஜீவா நகர்,

மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், டவர் லைன் காலனி, திருமால் நகர், அசோக புரம், வைராப்பாளையம், மூலப் பட்டறை, பெரியார் நகர், சத்தி ரோடு, கே.என்.கே. ரோடு, நேதாஜி ரோடு, காந்திஜி ரோடு, ஈ.வி.என். ரோடு, மேட்டூர் ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

மேற்கண்ட தகவலை செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Similar News