செய்திகள்

அரியலூர் அருகே மனுநீதி நாள் முகாமில் 189 பேருக்கு நலதிட்ட உதவிகள்

Published On 2016-07-21 20:20 IST   |   Update On 2016-07-21 20:20:00 IST
அரியலூர் மாவட்டம், ஜெங்கொண்டம் வட்டம், உடையார்பாளையம் (கிழக்கு) சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொருப்பு பூமி தலைமையில் நடைபெற்றது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம், ஜெங்கொண்டம் வட்டம், உடையார்பாளையம் (கிழக்கு) சிறப்பு மனுநீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் பொருப்பு பூமி தலைமையில் நடைபெற்றது.

இம்மனுநீதி நாள் முகாமில் செய்தித்துறை, ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், வேளாண்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை வாயிலாக சிறு கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இம்மனுநீதி நாள் முகாமில் பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, போன்ற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 233 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தாவது, தமிழக அரசு கல்விக்காகவும், சுகாதாத்திற்காகவும், பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பள்ளிவயது குழந்தைகளை படிக்க வைத்து கல்வியில் சிறந்து விளங்க செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இம்மனுநீதி முகாமில் முதியோர், விதவை உதவித்தொகை ஆணைகள் 138 நபர்களுக்கும், 7 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களும், 44 நபர்களுக்கு பட்டாமாற்ற ஆணைகளும், வருவாய்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு என 139 பயனாளிகளுக்கு நலத்திட உதவிகள் வழங்கப்பட்டது.

இம்மனுநீதி முகாமில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், உடையார்பாளையம் பேருராட்சித்தலைவர் பானுமதி இராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக உடையார்பாளையம் கோட்டாட்சியர் பா.டினாகுமாரி வரவேற்றார். நிறைவாக ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் திரு.திருமாறன் நன்றி கூறினார்.

Similar News