செய்திகள்

டெலிபோன் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது: அரசு பஸ் கண்டக்டர் பலி

Published On 2016-07-18 16:07 IST   |   Update On 2016-07-18 16:07:00 IST
டெலிபோன் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்

ஈரோடு:

அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊஞ்சக்காடு ஜி.எஸ்.காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 46) அரசு பஸ் கண்டக்டர்.

இவர் அந்தியூர் மந்தை ரோட்டில் பேட்டை பெருமாள் கோவில் வீதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலை தடுமாறி ரோட்டோரம் உள்ள ஒரு டெலிபோன் கம்பத்தில் மோதியது. இதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அந்தியூர் போலீஸ் பயிற்சி சப்–இன்ஸ்பெக்டர் கெஜலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News