செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி கணவன்– மனைவி படுகாயம்

Published On 2016-07-18 15:56 IST   |   Update On 2016-07-18 15:56:00 IST
மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் கணவன் மனைவி படுகாயம் அடைந்தனர் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்

ஈரோடு:

ஈரோடு, பெரியார் நகர்,ராசிநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி(58).இவரது மனைவி ராஜேஸ்வரி(50).இவர்களுக்கு அருண்குமார் (28) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தனது மோட்டார் சைக்கிளில் பவானி கூடுதுறை கோவிலுக்கு செல்வற்காக தனது மனைவி ராஜேஸ்வரியுடன் கவுந்தப்பாடி–கே.ஆர்.பாளையம் ரோட்டில் பெரியார் பஸ் நிறுத்தம் அருகே வந்தார்.

அப்போது ஒரு வேன் எதிர்பாராத வகையில் பழனிச்சாமி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் பழனிச்சாமி– ராஜேஸ்வரி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை சிகிச்சைக்காக பவானியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News