செய்திகள்
‘கஞ்சா’ பாக்கெட்டுகளுடன் பெண் கைது
‘கஞ்சா’ பாக்கெட்டுகளுடன் பெண் கைது
ஈரோடு:
ஈரோடு மாணிக்கம் பாளையம் ஹவுசிங்போர்டு அருகே உள்ள மாரியம்மன் கோவில் பக்கம் ஈரோடு வடக்கு போலீஸ் சப்–இன்ஸ் பெக்டர் வெர்னிகா ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு ஈரோடு நாராயண வலசு வாய்க்கால் மேட்டை சேர்ந்த பழனியம்மாள் (வயது 50) என்ற பெண் சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்தார்.
அந்த பெண்ணை பிடித்து விசாரித்தபோது அவரிடமிருந்து 1050 கிராம் எடை உள்ள கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதனால் அவர் கஞ்சா விற்றதாக கூறப்படுகிறது. அவரை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கைது செய்தார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.