செய்திகள்
மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: மத்திய மந்திரி பேட்டி
சென்னை விமான நிலையத்தில் மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
ஆலந்தூர்:
மத்திய மந்திரி கிரிராஜ்சிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மோடியின் கடந்த 2 ஆண்டு ஆட்சி சிறப்பாக உள்ளது. மத்திய அரசின் 'மேக்இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி சரியாக மேம்படுத்தப்படவில்லை.
ஆனால் மோடியின் ஆட்சியில் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து வழிகள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய மந்திரி கிரிராஜ்சிங் இன்று சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
மோடியின் கடந்த 2 ஆண்டு ஆட்சி சிறப்பாக உள்ளது. மத்திய அரசின் 'மேக்இன் இந்தியா' திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவில் உட்கட்டமைப்பு வசதிகள் பெருக்குவதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சாலை வசதி சரியாக மேம்படுத்தப்படவில்லை.
ஆனால் மோடியின் ஆட்சியில் சாலை போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து வழிகள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருக்கிறது. வரும் ஆண்டுகளில் மேலும் வேலை வாய்ப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.