செய்திகள்

புதுக்கோட்டை அருகே வெறிநாய் கடித்து சிறுவன் உள்பட 10 பேர் காயம்

Published On 2016-07-09 09:13 IST   |   Update On 2016-07-09 09:13:00 IST
புதுக்கோட்டை அருகே வெறிநாய் கடித்ததில் 4 வயது குழந்தை உள்பட 10 பேர் காயமடைந்தனர்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை அருகே வெறிநாய் கடித்ததில் 4 வயது குழந்தை உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே காட்ராம்பட்டி, சிதம்பரவிடுதி, செட்டிவிடுதி ஆகிய பகுதிகளில் நேற்றுவெறிநாய் ஒன்று சுற்றி திரிந்தது. திடீரென அந்த நாய் தெருவில் நடந்து சென்றவர்களை எல்லாம் விரட்டி விரட்டி கடித்தது. மணவாளன்நகரில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுவன் ரதீசையும் கடித்தது. அவனது அலறல் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து நாயை விரட்டி விட்டு குழந்தையை மீட்டனர்.

அதே போல் சிதம்பர விடுதியை சேர்ந்த மேகராஜ் (வயது 40), மீனம்பாள்(87), காட்ராம்பட்டியை சேர்ந்த பழனி, சாந்தா, முத்து மீனா உளபட 10க்கும் அதிகமானோரை வெறிநாய் கடித்தது. காயமடைந்தவர்கள் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மணவாளன்நகரை சேர்ந்த சீனி, ராஜேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான பசுமாடு மற்றும் கொத்த மங்கலத்தில் 10க்கும் அதிகமான ஆடுகளை வெறிநாய் கடித்தது.

ஆலங்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் வேட்டை நாய்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்தநாய்கள்தான் நாளடைவில் வெறி பிடித்து கண்ணில் படுபவர்களை எல்லாம் விரட்டிச்சென்று கடிக்கிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே சுற்றி திரியும் வெறிநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Similar News