செய்திகள்

பொன்னமராவதி பகுதியில் குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம்: ரகுபதி எம்.எல்.ஏ. அறிவிப்பு

Published On 2016-07-08 22:35 IST   |   Update On 2016-07-09 17:00:00 IST
பொன்னமராவதி பகுதியில் குப்பைகளை அகற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று ரகுபதி எம்.எல்.ஏ. கூறினார்.

பொன்னமராவதி:

பொன்னமராவதியின் மையப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அப்புறப்படுத்தக்கோரி வரும் 11ம் தேதி வர்த்தகர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் புதுக்கோட்டை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்படும் என திருமயம் எம்எல்ஏ. ரகுபதி கூறினார்.

பொன்னமராவதி நகரின் மையப்பகுதியில் கொட்டப்பட்டு வரும் குப்பை மற்றும் கழிவுகளை அப்பறப்படுத்த கோருவது சம்மந்தமாக வர்த்தகர்கள் மற்றும் சேவை சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு திருமயம் எம்எல்ஏ. ரகுபதி தலைமை வகித்தார்.

முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீ, திமுக நகரச்செயலாளர் அழகப்பன், காங்கிரஸ் நகரத் தலைவர் பழனிப்பன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். வர்த்தக கழகத்தலைவர் பழனியப்பன், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் வேலாயுதம், ராயல்லயன்ஸ் சங்கத்தலைவர் அன்புச்செல்வன், சிட்டி லயன்ஸ் சங்க செயலாளர் செல்வம், ரோட்டரி சங்கத்தலைவர் முரளிதரன், பேரூராட்சிக்கவுன்சிலர் காளிதாஸ், முன்னாள் கவுன்சிலர் செல்வக்குமார் ஆகியோர் குப்பையை அப்புறபடுத்துவது குறித்து பேசினர். இதனைத்தொடர்ந்து திருமயம் எம்எல்ஏ.ரகுபதி பேசியதாவது:–

பொதுமக்களுக்கு இடை யூராக கொட்டப்பட்டுள்ள குப்பையை அப்புறப்படுத்தக்கோரி வரும் 12ம் தேதி பஸ் மறியல் போராட்டம் நடத்த முடிவுசெய்திருந்தோம். ஆனால் அரசுக்கும் பேரூராட்சிக்கும் காலஅவகாசம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் அதற்கான மாற்று வழியாக கொட்டப்படும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மைத்திட்டத்தின் கீழ் உரங்கள் தயாரித்து குப்பைக்கழிவுகளை அப்புறப்படுத்தலாம். அல்லது பொன்னமராவதி பேரூராட்சிப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாருக்கு விற்பனை செய்து அதனை அப்புறப்படுத்தலாம். அல்லது இந்தக்குப்பைகளை முழுவதும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 11ம் தேதி திங்கள்கிழமை வர்த்தகர்கள் மற்றும் சேவை அமைப்புகள் மற்றும் பொதுமக்களுடன் சென்று புதுக்கோட்டை கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிப்பது.

இதற்காக இரண்டு மாதம் காலஅவகாசம் கொடுக்கப்படும். இந்த குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காதது பேரூராட்சியின் அலட்சியம் தான் காரணம். தொடர்ந்து குப்பைக்கூழங்கள் இவ்வாறு இருந்தால் குடிதண்ணீரில் சாக்கடை நீர் தான் வரும் தமிழ அரசும் பேரூராட்சியும் இதற்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் பஸ் மறியல் போராட்டமும், மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாக இதனை அப்புறப்படுத்த ரெயில் மறியல் போராட்டமும் நடத்த தயாராக உள்ளேன் எனப்பேசினார்.

இதில் வர்த்தக சங்க செயலாளர் முகமது அப்துல்லா, பொருளாளர் சத்தியமூர்த்தி, மூன்று லயன்ஸ் சங்க நிர்வாகிகள்,ரோட்டரி சங்க நிர்வாகிகள் , முத்தமிழ்பாசறை நிர்வாகிகள், வர்த்தகர் கழக நிர்வாகிகள், நகைக்கடை உரிமையாளர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News