செய்திகள்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் வரும் 8-ந்தேதி வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
சத்தியமங்கலம் வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி வரும் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை மொத்தம் ஒரு வாரம் நடக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த அற்புத வனப்பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாக திகழும் இந்த காட்டில்தான் ஒரு காலத்தில் சந்தன மரம் கடத்தல்காரன் மாயாவி வீரப்பன் 20 ஆண்டுக்கு மேலாக கோலோச்சி இருந்தான்.
இவனும் இவனது கூட்டாளிகளும் காட்டில் தங்கி இருந்த போது ஏராளமான யானைகள் கொல்லப்பட்டன. தந்தங்களை கடத்துவதற்காக இந்த யாகைள் கொல்லப்பட்டன. மேலும் பல அரிய வன விலங்குகளும் வீரப்பனால் கொல்லப்பட்டன.
அதிரடிப்படை வீரர்களால் மாயாவி வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனம் புத்துணர்வு பெற்று திகழ்கிறது.
யானைகள், காட்டெருமைகள், பல அரிய வகை மான் இனங்கள் மற்றும் புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி சில காரணங்களால் நடக்கவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு சத்தி வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி வரும் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை மொத்தம் ஒரு வாரம் நடக்கிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மொத்தம் 46 பீட்களில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு ‘பீட்’ பகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் புகுந்து இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு வனத்துறை அலுவலகத்திலும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுவது எப்படி? என்பதை பற்றி கடந்த 1-ந் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் 8-ந் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி எடுத்த இவர்கள் ஒவ்வொரு குழுவினராக பிரிந்து அடர்நத காட்டுக்குள் தகுந்த பாதுகாப்பு ஆயுதங்களுடன் புகுகிறார்கள்.
யானைகளின் வழிதடம், விலங்குகளின் எச்சம் மற்றும் நீர் நிலைகளில் இந்த குழுவினர் முகாமிட்டு வன விலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுகிறார்கள்.
சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை கணிசமாக கடந்த தடவை உயர்ந்தது. அதேபோல் தற்போது நடக்க உள்ள கணக்கெடுப்பின் போதும் புலிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி வனவிலங்குகள் நிறைந்த அற்புத வனப்பகுதி ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய பகுதியாக திகழும் இந்த காட்டில்தான் ஒரு காலத்தில் சந்தன மரம் கடத்தல்காரன் மாயாவி வீரப்பன் 20 ஆண்டுக்கு மேலாக கோலோச்சி இருந்தான்.
இவனும் இவனது கூட்டாளிகளும் காட்டில் தங்கி இருந்த போது ஏராளமான யானைகள் கொல்லப்பட்டன. தந்தங்களை கடத்துவதற்காக இந்த யாகைள் கொல்லப்பட்டன. மேலும் பல அரிய வன விலங்குகளும் வீரப்பனால் கொல்லப்பட்டன.
அதிரடிப்படை வீரர்களால் மாயாவி வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு சத்தியமங்கலம் வனம் புத்துணர்வு பெற்று திகழ்கிறது.
யானைகள், காட்டெருமைகள், பல அரிய வகை மான் இனங்கள் மற்றும் புலி, சிறுத்தைகளின் எண்ணிக்கையும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஆண்டுதோறும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. கடந்த ஆண்டு இந்த கணக்கெடுப்பு பணி சில காரணங்களால் நடக்கவில்லை.
இந்த நிலையில் இந்தாண்டு சத்தி வனப்பகுதியில் கணக்கெடுப்பு பணி வரும் 8-ந்தேதி தொடங்கி 14-ந்தேதி வரை மொத்தம் ஒரு வாரம் நடக்கிறது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ள மொத்தம் 46 பீட்களில் இந்த கணக்கெடுப்பு நடக்கிறது. ஒவ்வொரு ‘பீட்’ பகுதியிலும் 5 பேர் கொண்ட குழுவினர் காட்டுக்குள் புகுந்து இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
இவர்களுக்கு ஒவ்வொரு வனத்துறை அலுவலகத்திலும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுவது எப்படி? என்பதை பற்றி கடந்த 1-ந் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வரும் 8-ந் தேதி வரை நடக்கிறது.
பயிற்சி எடுத்த இவர்கள் ஒவ்வொரு குழுவினராக பிரிந்து அடர்நத காட்டுக்குள் தகுந்த பாதுகாப்பு ஆயுதங்களுடன் புகுகிறார்கள்.
யானைகளின் வழிதடம், விலங்குகளின் எச்சம் மற்றும் நீர் நிலைகளில் இந்த குழுவினர் முகாமிட்டு வன விலங்குகளின் கணக்கெடுப்பில் ஈடுபடுகிறார்கள்.
சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகளின் எண்ணிக்கை கணிசமாக கடந்த தடவை உயர்ந்தது. அதேபோல் தற்போது நடக்க உள்ள கணக்கெடுப்பின் போதும் புலிகளின் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.