செய்திகள்
சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்: வாலிபர் கைது
சிதம்பரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு:
சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் கமலா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரத்தூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயராமன் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டனர். கமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(23) என்பவர் அங்கு வந்தார். கமலா வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பெற்றோர் வெளியூர் சென்று திரும்பியவுடன் கமலா நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கூறினார்.
இதையடுத்து ஜெயராமன் பிரகாஷ் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தார். அப்போது பிரகாசும், அவர் தாய் அமுதாவும் சேர்ந்து ஜெயராமனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ், அவரது தாய் அமுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் அருகே உள்ள ஆயிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகள் கமலா (வயது 16 பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் ஒரத்தூரில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
சம்பவத்தன்று ஜெயராமன் குடும்பத்தினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வெளியூர் சென்று விட்டனர். கமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(23) என்பவர் அங்கு வந்தார். கமலா வீட்டிற்குள் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். பெற்றோர் வெளியூர் சென்று திரும்பியவுடன் கமலா நடந்த சம்பவம் குறித்து அவர்களிடம் கூறினார்.
இதையடுத்து ஜெயராமன் பிரகாஷ் வீட்டிற்கு சென்று அவரை கண்டித்தார். அப்போது பிரகாசும், அவர் தாய் அமுதாவும் சேர்ந்து ஜெயராமனை திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சேத்தியாத்தோப்பு மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெயராமன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ், அவரது தாய் அமுதா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.