செய்திகள்

பா.ஜ.க. இளைஞரணி மாநில செயலாளராக சீர்காழி சரண்ராஜ் நியமனம்

Published On 2016-06-29 17:57 IST   |   Update On 2016-06-29 17:57:00 IST
பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநில செயலாளராக கே.சரண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சீர்காழி:

பாரதீய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இளைஞரணி மாநில செயலாளராக கே.சரண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரையின்பேரில், இளைஞரணி மாநில தலைவர் வினோ. பி.செல்வம் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்துள்ளார்.

புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்ட கே.சரண்ராஜ் தன்னை இந்த பொறுப்பில் நியமித்த மாநில தலைவர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், மாநில பொது செயலாளர் கருப்பு.முருகானந்தம், இளைஞரணி மாநில தலைவர் வினோஜ்.பி.செல்வம், கோட்ட பொறுப்பாளர் தங்க.வரதராஜன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும் மாநில் செயலாளர் வேதரத்தினம், நாகை மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் மாநில, மாவட்ட தலைவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.

சரண்ராஜ் 2009 –ம் ஆண்டு பா.ஜ.க.வில் சேர்ந்து நகர பொது செயலாளராகவும், மாவட்ட இளைஞரணி தலைவராகவும் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News