செய்திகள்

வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2016-06-27 17:12 IST   |   Update On 2016-06-27 17:12:00 IST
வேதாரண்யம் அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா மலையாற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 45), இவர் நேற்று வேட்டைக்காரனி இருப்புக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் வாணிப கிடங்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். ஆனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் சாவியை எடுத்து செல்லவில்லை.

அதனை நோட்டமிட்ட சுனாமி குடியிருப்பு பூக்கார தெருவை சேர்ந்த சதீஸ் என்பவர் மோட்டார் சைக்கிளை வாலிபர் திருடி சென்றுள்ளார். அதனைகண்ட சிலர் ரங்கநாதனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து கடையில் இருந்து வெளியில் வந்த அவர் தனது மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வேட்டைகாரனிருப்பு போலீசில் புகார்செய்தார்.

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை தேடி வந்தனர்.

வேதாரண்யம் மெயின் ரோட்டில் திருடிய மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்தனர். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News